Tamil quotes
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்!
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்கதே!
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி!
உலகம் எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள்!
எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமாந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிடாதே!
பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும்!
அறிவு வரும்போது மனிதன் முதிர்ச்சி அடைகிறான். அவனிடம் ஒழுக்கம் நிலவுகிறது!
தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும்!
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்! உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!
வெற்றியை சந்தித்தவன் இதயம் பூவை போல் மென்மையானது! தோல்வியை சந்தித்தவன் இதயம் இரும்பை விட வலிமையானது!
நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன!
உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
புன்னகையின் வழியாகவும், அழுகையின் வழியாகவும் நாம் பல பாடங்களைக் கற்றுக்கொண்டே இருக்கிறோம். அனுபவம் ஒன்றுதான் மிகச்சிறந்த ஆசிரியர்!
பின்னோக்கிப் பார்க்காதே எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார் முன்னேறுவது உறுதி!
அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு!
வெறும் புத்தகங்களைப் படிப்பதால் மனிதன் வறட்சி அடைகிறான் படித்தவன் யார்? துளியளவாவது அன்பை உணர்பவனே படித்தவன் கடவுளே அன்பு. அன்பே கடவுள் கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார்!
பூக்களாக இருக்காதே உதிர்ந்துவிடுவாய்! செடிகளாக இரு அப்போது தான் பூத்து கொண்டே இருப்பாய்!
Post a Comment